ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திரா படத்தில் அறிமுகமானவர் அனுஹாசன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் பின்பு சின்னத்திரையில் காப்பி வித் அனு நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பிறகு வெளிநாட்டுக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலானவர் மீண்டும் வல்லதேசம் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
நான் எப்போதும் சினிமாவை நேசிக்கிறவள். நடிக்க விரும்புகிறவள். ஒரு சின்ன கேப் விட்டேன் அவ்ளோதான். அதுக்கு காரணம் ஒரே மாதிரியான அக்கா, அண்ணி கேரக்டர்களாக வந்ததால் சினிமா போரடித்து விட்டது. சவாலான வித்தியாசமான கேரக்டராக வந்தால் நடிக்கலாம் என்று காத்திருந்தேன். ஹாக்கி என்ற படம் வந்தது. அதில் ஹாக்கி கோச்சராக நடித்தேன். அதற்காக ஹாக்கி விளையாட்டை கற்றுக் கொண்டேன். இப்போது வல்லதேசம். குழந்தையை தொலைத்து விட்டு தேடுகிற ஒரு தாயின் கதை. இதில் எனக்கு ஆக்ஷன் சீனெல்லாம் இருக்கிறது. இதற்காக உடம்பை குறைத்து பிட்டாகியிருக்கேன்.
என்னை பொருத்தவரை நடிப்பு என்பது நல்ல கலை. அதை செய்வதற்கு சவாலான கேரக்டர் வேண்டும். பணத்துக்காக ஒரு போதும் நடிக்க மாட்டேன். நிறைய உழைத்து ஒரு கேரக்டரை பண்ணும்போதுதான் திருப்தியாக இருக்கும். சும்மா அக்கா அண்ணியாக வந்து சிரித்து விட்டு, அழுதுவிட்டு போவதில் உடன்பாடில்லை" என்கிறார் அனுஹாசன்.