ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசன், த்ரிஷா நடிக்கும் தூங்காவனம் படத்தை, கமலிடம் கடந்த ஏழு வருடங்களாக உதவியாளராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் எம். செல்வா என்ற புதிய இயக்குநர் இயக்கி வருகிறார். கமல் மனதில் நினைப்பதை அடுத்த நிமிடம் செய்து முடிப்பவர் என்று ராஜேஷ் எம். செல்வா பற்றி, கமலுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்வார்கள். அதனால்தான் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் தானே நடிக்கும் தூங்காவனம் படத்தை இயக்கும் வாய்ப்பை ராஜேஷ் எம்.செல்வாவுக்கு வழங்கி இருக்கிறார் கமல்.
தூங்காவனம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் தூங்காவனம் படம் வெளிவரவிருக்கும் சூழலில் ராஜேஷ் எம். செல்வா பற்றி ஒரு சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தூங்காவனம் படம் ராஜேஷ் எம். செல்வா இயக்கும் முதல் படம் என்று கமல் தரப்பில் சொல்லப்பட்டதற்க மாறாக, அவர் இதற்கு முன் காலைப்பனி என்ற படத்தை இயக்கியவர் என்ற தகவல் ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது. 2008 ஆம் ஆண்டு வெளியான காலைப்பனி படத்தை ராஜேஷ் செல்வா என்ற பெயரில் இயக்கி உள்ளார்.
காலைப்பனி படத்தில் ஜே.ஜே என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, அதிசயா என்கிற வசுந்தரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அப்பா-மகள் சென்டிமென்ட் படமான அந்தப் படத்தில் அப்பாவாக நாசர் நடித்திருந்தார். 'காலைப்பனி' படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கியதை மறைத்துவிட்டு தூங்காவனம் படத்தில் இயக்குநராக அறிமுகமாவதாக சொல்கிறார்கள்.
ஆக, தூங்காவனம் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் முதல் படம் அல்ல. இரண்டாவது படம். எதற்கு உண்மையை மறைக்க வேண்டும்?