ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ், தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கிடையே படங்களை கைப்பற்றுவதில் திரைக்குப்பின்னால் ஒரு களேபரமே நடந்து கொண்டிருப்பது வாடிக்கை. அந்த வகையில், சில நடிகைகள் டைரக்டர்களுடன் நட்பு வளர்ப்பார்கள். இன்னும் சிலர் மெகா ஹீரோக்களை வசப்படுத்தி வைத்திருப்பார்கள். அந்த வகையில், சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் சமந்தா, காஜல்அகர்வால், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கிடையே புதிய படங்களை கைப்பற்றுவதில் பெரிய போரே நடந்து கொண்டிருக்கிறது.
இதில், சமந்தா தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தபோது ஸ்ருதிஹாசனுக்கும், அவருக்குமிடையே மெகா ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் பெரும் போட்டி நிலவியது. ஆனால் இப்போது சமந்தா தமிழுக்கு வந்து விட்டதால் அவர்களுக்கிடையிலான போட்டி இல்லை. மாறாக, காஜல்அகர்வால் அவருக்கு போட்டி நடிகையாகியிருக்கிறார். தமிழில் தனது மார்க்கெட் மந்தமாக இருப்பதால் தெலுங்கிலாவது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்வோம் என்று இப்போது ஆந்திராவில் முகாமிட்டிருக்கிறார் காஜல்அகர்வால்.