ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மண்டோதரி படத்தில் நாயகனாக நடித்தவர் பா.ரஞ்சித்குமார். இவர் தற்போது பேய் இருக்கா இல்லையா -என்றொரு படத்தை இயக்கி வருகிறார். அதோடு தனது பெயரையும் ரஞ்சித் பாரிஜாதம் என்று மாற்றியிருக்கிறார். பேய் இருக்கா இல்லையா படம் பற்றி அவர் கூறும்போது,
நான் ஏ.வெங்கடேஷ் உள்பட பல பிரபல டைரக்டர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். இந்த நிலையில், மண்டோதரி படத்தில் உதவி இயக்குனராகத்தான் இயக்குனர் சம்பத்திடம் சேர்ந்தேன். அப்போது அந்த படத்தில் அவருடன் சேர்ந்து நானும் ஒரு பார்ட்னர் ஆனேன். அதையடுத்து என்னை திரைக்கதை வசனம் எழுதி, கோ டைரக்டராகவும் ஒர்க் பண்ண சொன்னார். அதன்பிறகு புது ஹீரோதான் என்றபோது, எதற்கு வேறு நடிகரிடம் போக வேண்டும் என்று என்னையே ஹீரோவாக்கி விட்டார். இதுதான் உதவி இயக்குனராக போன நான் ஹீரோவான கதை.
மேலும் இப்போது, பேய் இருக்கா இல்லையா -என்ற படத்தை நானே இயக்கி வருகிறேன். இன்றைக்கு பேய் கதையில் எத்தனையோ படங்கள் வருகின்றன. பயமுறுத்துவது, பழி வாங்குவது என கதைகள் பண்ணுகிறார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு ஒரு யதார்த்தமான விசயத்தை சொல்வோம் என்றுதான் இந்த கதையை ரெடி பண்ணினேன். ஒரு நான்கு அனாதை பசங்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு விசயம். நல்லவங்களுக்கு ஒரு பேய் எந்த வகையில் உதவி செய்கிறது என்பதுதான் இந்த படம்.
அதாவது, நாம் ஒரு வீட்டில் புதிதாக குடியேறுகிறோம். அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கும். ஆனால் நமக்கு தெரியாது. தெரியாத வரைக்கும் நாம் அதை தொந்தரவு செய்ய மாட்டோம். ஆனா இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அதை தொந்தரவு செய்வோம். அதாவது சாமியாரை கூட்டிட்டு வந்து அதை விரட்ட முயற்சிப்போம். அதன்பிறகுதான் அந்த பேய் நம்மளை அட்டாக் பண்ணத் தொடங்கும்.
மேலும், நம்ம வீட்டில் ஒருவர் இறந்து விட்டால் அவரை பேயாக நினைக்க மாட்டோம். தெய்வமாகத்தான் நினைப்போம். ஆனால் மற்றவர்கள் இறந்தால் அந்த வீட்டு பக்கம் இரவு நேரத்தில் செல்லவே பயப்படுவார்கள். குறிப்பிட்ட சில நாட்கள் வரை அந்த பேய் வந்து நிற்கும் என்று சொல்வார்கள். ஆனால் பேய் பிசாசு இதெல்லாம் கடவுளுக்கு சமமானது. அது நல்லது மட்டுமே செய்யும்.அதுமட்டுமின்றி, நிறைவேறாத ஆசையுடன் இறந்து போனவர்களின் ஆன்மாவின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வைத்தால், கடவுளாக இருந்து நமக்கு தேவையானதை செய்து கொடுப்பார்கள். ஒரு கண்ணாடி மாதிரிதான் நாம அவங்களுக்கு என்ன செய்கிறோமோ அதை அவர்கள் பிரதிபலிப்பார்கள். இதுதான் பேய் இருக்கா இல்லையா படத்தின் கதை.