ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜிக்கு பிறகு ரஜினி-கமல் இருவரும் போட்டி நடிகர்களாக செயல்பட்டனர், அவர்களைத் தொடர்ந்து விஜய்-அஜித் போட்டிக்களத்தில் உள்ளனர். அதேபோல் சிம்பு-தனுசும் முன்பு இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் போட்டியில் இருந்து விலகி நண்பர்களாக தோள் போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களைப்போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போட்டி நடிகைகளாக திகழ்ந்து கொண்டிருந்த த்ரிஷா-நயன்தாரா இருவரும் இப்போது தொழில் போட்டியில் இருந்து விலகி நட்பு வளர்த்து வருகின்றனர்.
அப்படி அவர்களை தோழிகளாக கைகோர்க்க வைத்தவர் நட்பு சிகாமணி ஆர்யாதான். தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்கு தனது சினிமா தோழிகள் அனைவரையும் வரவைத்திருந்தார். அவர்களில் த்ரிஷா-நயன்தாரா குறிப்பிடத்தக்கவர்கள். தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ ரிலீசுக்கே வருவதற்கு யோசிக்கும் இந்த நடிகைகள், ஆர்யாவின் தம்பி நடித்த படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்து முன்வரிசையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தனர்.