ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த தென்னிந்தியத் திரைப்படமாக ஷங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்து வெளியான 'எந்திரன்' திரைப்படம் அமைந்தது. வசூலிலும் புதிய சாதனையை படைத்தது. அந்த சாதனைகளை சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் முறியடித்தது. அதையடுத்து ஷங்கரின் அடுத்த படைப்பான 'எந்திரன் 2' படம் பற்றிய பேச்சுக்களும், அந்தப் படம் எப்படி அமையக் போகிறது என்பதைப் பற்றிய செய்திகளும் அதிகம் வர ஆரம்பித்தன. கடந்த சில மாதங்களாகவே படத்தின் கதை விவாதம் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் முழு கதையையும் சமீபத்தில் ரஜினியிடம் ஷங்கர் சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதையைக் கேட்ட ரஜினிகாந்த் ஷங்கருக்கு 'ஓ.கே.' சொல்லிவிட்டதாகவும் இதையடுத்து அடுத்த கட்ட வேலைகளை ஷங்கர் பரபரப்பாக ஆரம்பித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். கதைக்கேற்ற காட்சியமைப்புகள், கிராபிக்ஸ், அரங்க அமைப்புகள் ஆகியவற்றையைப் பற்றிய விவாதத்தில் ஷங்கர் இறங்கிவிட்டாராம். 'பாகுபலி' படம் இந்தியத் திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்ததைப் போல மேலும் ஒரு கட்டத்தை நோக்கி 'எந்திரன் 2' படம் இருக்க வேண்டும் என்று ஷங்கர் விரும்புகிறாராம்.
தென்னிந்தியத் திரையுலகிற்கே கிராபிக்ஸ் என்றால் எப்படி அதைப் பயன்படுத்த வேண்டும் என்று காட்டியவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பிற்கு முந்தைய கட்டப் பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிவடைந்தால் இந்த வருடக் கடைசியில் 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள். அதற்குள் ரஜினிகாந்த் , பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விடுவார். கூடிய விரைவில் 'எந்திரன் 2' பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றே தெரிகிறது.