ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சில படங்களில் ஹீரோயினியாகவும் நடித்த பிறகுதான் தமிழுக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். ரஜினியின் நெற்றிக்கண் பட நாயகி மேனகாவின் மகள் என்பதால் கீர்த்தியை கோலிவுட் வந்தவேகத்திலேயே வாரி அணைத்துக்கொண்டது. அதனால் அரை டஜன் படங்களில் நடித்து வந்தார்.
அப்படி அவர் நடித்து வந்த படங்களில் விக்ரம்பிரபுவுடன் நடித்த இது என்ன மாயம் சமீபத்தில் வெளியானது. ஆனால் படம் ஹிட்டடிக்கவில்லை. இதனால் மனதளவில் சற்றே கலவரடைந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சினிமா செண்டிமென்ட் நிறைந்த உலகமாயிற்றே அதனால் வந்த கலக்கம்தான் இது. ஆனபோதும், இன்னும் கைவசம் பல படங்கள் உள்ளதே. அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ரஜினி முருகன் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கையும் ஒரு பக்கம் அவரை தளரவிடாமல் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறது.