ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுப்பிரமணியபுரம், நாடோடி, ரம்மி படங்களில் நடித்தவர் இனிகோ பிரபாகரன். ஹீரோவாக ஜெயிக்க போராடும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் மிகவும் எதிர்பார்த்த ரம்மி படம்கூட இவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது அவர் வீரைய்யன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் இயக்குனர் எஸ்.பரித் இயக்குகிறார். தென்னவன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்செண்ட், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பி.வி.முருகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோலிசோடா அருணகிரி இசை அமைக்கிறார்.
"மன்னர்கள் வாழ்ந்த பூமியான தஞ்சையில் இப்போது மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்ட மக்கள் இப்போது வெளிநாடுகளில் கூலி வேலை செய்யும் நிலை ஏன் வந்தது. தஞ்சையின் பழம்பெருமை என்ன ஆனது என்பதை பற்றிச் சொல்லப்போகும் படம். முழு படமும் தஞ்சையை சுற்றி படமாகிறது" என்கிறார் இயக்குனர் பரித். படத்தின் பூஜை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலில் நடந்தது.