ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கெளதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானவர் வித்யுலேகா. அதையடுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, மாலினி 22 பாளையங்கோட்டை, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, மாஸ் என பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார் அவர்.
ஆனால் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் அவருக்கு மனைவியாக ஒரேயொரு காட்சியில்தான் நடித்திருந்தார். அதுவும், தன்னை வெறுக்கும் கணவனை, உன் காதலியை நெனச்சிக்கிட்டாவது என்னை ஒரேயொரு முறை கட்டிப்பிடிச்சுக்கோ மாமா -என்று சொல்லி சந்தானத்தின் மனசை தொடும் வகையில் நடித்திருந்தார் வித்யுலேகா. அந்த காட்சியே அந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்தது.
ஆக, அதற்கு முன்பு எத்தனையோ படங்களில் காமெடி ரோல்களில் நடித்த வித்யுலேகாவிற்கு அந்த ஒரு காட்சி பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. இப்போது விஎஸ்ஓபி, புலி, மாப்ள சிங்கம் என பல படங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் வித்யுலேகாவுக்கு காமெடி கேரக்டர்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றபோதும், அந்த படங்களின் டைரக்டர்களிடம் முழுக்க முழுக்க என்னை சிரிக்க மட்டுமே வைக்காமல் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தது மாதிரி ஓரிரு காட்சிகளிலாவது மனசை டச் பண்ணும் வகையில் நடிக்க வையுங்கள் என்ற கேட்டுக்கொண்டு வருகிறாராம். அதோடு, எதிர்காலத்தில் படிப்படியாக காமெடியில் இருந்து குணசித்ர நடிகையாகி விட வேண்டும் என்பதும் வித்யுலேகாவின் ஆசையாகியிருக்கிறதாம்.