விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக எந்த ஒரு நடிகை நடித்தாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவரும் முன்னணி நடிகையாகவே இருப்பார். ஆனால், ஸ்ரேயா விஷயத்தில் மட்டும் அது நடக்காமல் போய்விட்டது. ஸ்ரேயா தமிழில் நாயகியாக நடித்த 'மழை' படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஷங்கர், 'சிவாஜி' படத்திற்காக அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.
'சிவாஜி' படத்திலும் தன்னுடைய இளமையாலும், கிளாமரான நடிப்பாலும் ரசிகர்களை நன்றாகவே கவர்ந்தார் ஸ்ரேயா. அதன் பின் விஜய், விஷால், விக்ரம், தனுஷ், ஆர்யா, ஜீவா உள்ளிட்ட மற்ற ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்திருந்தாலும் அவரால் தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வர முடியவில்லை. ஓரிரு படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தது. 2011க்குப் பிறகு அவரை தமிழில் நடிக்க வைக்க யாருமே முன் வரவில்லை.
தெலுங்கிலும் மற்ற ஹிந்தி நடிகைகளின் வரவாலும், அவர்கள் ஸ்ரேயாவை விட கிளாமரில் கலக்கியதாலும் அங்கும் மார்க்கெட்டை இழந்தார். கடந்த வருடம் வெளிவந்த 'மனம்' படம் அவருக்கு மீண்டும் ஒரு என்ட்ரியை அங்கு கொடுத்தது. இதுவரை ஹிந்தியிலும் சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி ஸ்ரேயாவுக்குக் கிடைக்கவில்லை. இப்போது 'த்ரிஷ்யம்' படத்தில் அஜய் தேவகன் ஜோடியாக டீன்ஏன் பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நாளை இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தென்னிந்தியாவில் வெளியான நான்கு மொழிகளிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் ஹிந்தியிலும் தனக்கு மீண்டும் ஒரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஸ்ரேயா நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம். படத்திற்கான அனைத்து பிரமோஷன்களிலும் அவர் தவறாமல் கலந்து கொண்டு வருவதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம்.