ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்ளில் ஒருவர் ராம்ஜி. பருத்தி வீரன், ராம், இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். பி.சி.ஸ்ரீராமின் மாணவர். இனி வருடத்திற்கு இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: தற்போது தனி ஒருவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறேன். ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஒரு ஒளிப்பதிவாளனுக்கு சவாலான விஷயங்கள் தனி ஒருவனில் இருக்கிறது. இதற்கு முந்தைய எனது படங்கள் அனைத்துமே திட்டமிட்ட காலத்தை விட அதிக கால அகாசங்கள் எடுத்து கொண்டன. அதில் என் தவறோ என்னால் தாமதமோ கிடையாது. ஒரு படத்தை குறிப்பிட்ட நாட்களில் முடிப்பது இயக்குனர் கையில்தான் இருக்கிறது.
இனி வருடத்திற்கு இரண்டு படங்களில் பணியாற்ற முடிவு செய்திருக்கிறேன். ஒளிப்பதிவாளனுக்கு முக்கியத்தும் இருக்கிற கதைகளை தேர்ந்தெடுத்து பணியாற்ற இருக்கிறேன். இது என்னுடைய முடிவுதான் அது நடக்குமா? நடக்காதா என்று தெரியாது என்கிறார் ராம்ஜி.