ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துரத்தும் சர்ச்சை, சித்தியால் பிரச்னை, இயக்குனரின் வேண்டுகோள் என, எல்லாவற்றிலும் இருந்து மீண்டு, புது தெம்போடு, சகலகலா வல்லவன் படத்தில் நடித்து வரும்,
நடிகை அஞ்சலி, தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ரொம்ப நாளைக்குப் பின், உங்களை தேடி கண்டுபிடித்து, சகலகலா வல்லவன் படத்தில் நடிக்க வைத்துள்ளனரே?
அப்படி எல்லாம் தேடி கண்டுபிடிக்கவில்லை. ஒரு ஆண்டிற்கு பின், நான் நடிக்கும் படம் இது. என்னிடம் கதை சொல்லும் போது, ரொம்ப நகைச்சுவையாக இருந்தது; அப்போதே, விழுந்து விழுந்து சிரித்தேன். வாய்விட்டு சிரிக்கும் கதை இது.
படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கீங்க?
த்ரிஷாவும், நானும், ஜெயம் ரவிக்கு ஜோடியா நடிச்சிருக்கோம். கிராமத்து ரோல்; பாவாடை தாவணியில் வர்றேன். என்னோட கேரக்டர் ரசிகர்களுக்கு பிடிக்கும். நகைச்சுவையோடு சேர்ந்த ஒரு கதாபாத்திரம். சூரியும் இருக்கார்; ரொம்ப கலாய்ச்சிகிட்டே இருப்பார்; ரகளை நடந்திருக்கு படத்தில்.
இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டி, திரும்ப படங்களில் நடிக்க வருவீங்கனு நினைத்து பார்த்தீங்களா?
அந்த பிரச்னை நடந்த போதும், நான் கீதாஞ்சலி போன்ற தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். அதன்பின்,சகலகலா வல்லவன் நடிக்க ஒப்புக் கொண்டேன். எனக்கு பல பேர், திரைத்துறையில் ஆறுதல் சொன்னாங்க. தயாரிப்பாளர்களுக்கும் என் மேல் நம்பிக்கை இருந்தது. இப்போது தமிழ், தெலுங்கு என, ஆறு படங்களில் நடிக்கிறேன்.
திடீர்னு தடதடன்னு உடல் எடையை கூட்டிட்டீங்களே?
அவ்ளோ எல்லாம் எடை போடல, படத்தின் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ, அந்தளவுக்கு இருக்கேன்னு சொல்லலாம். மாப்பிள்ளை சிங்கம் படத்துக்காக கொஞ்சம் எடை குறைத்தேன். இறைவி படத்திற்கு இன்னும் எடை குறைக்கச் சொல்லி இருக்காங்க. வெளியூர் உணவு, சரியான உடற்பயிற்சி இல்லாமை, இதெல்லாம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது; குழந்தை இருக்கு என, சமீபத்தில் வெளியான செய்தி பற்றி?
இதை உங்கள் மூலமாக, ஒரு அறிக்கையாகவே கொடுக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. என் அம்மாவே இந்த செய்தியை படிச்சிட்டு, எப்பம்மா கல்யாணம் செய்தேன்னு கேக்குறாங்க. அடுத்த இரண்டு தினத்தில் குழந்தை இருக்குன்னு வேறு செய்தி வந்தது.நீங்க சொல்லுங்க... தொடர்ந்து, ஷூட்டிங் இருக்கும்போது, எப்படி திடீர்னு குழந்தை பிறக்கும்... என் அண்ணன் மகள் அவள். ஒரு பட விழாவுக்கு, அந்தக் குட்டி பாப்பாவை அழைச்சிட்டு போனோம். அவளோடு எல்லாருமே புகைப்படம் எடுத்தாங்க. ஆனால், என்னை மட்டும் செய்தி ஆக்கிட்டாங்க... நம்ப வேண்டாம்.
இப்போது உங்கள் மனநிலை மாற்றம்?
சமீபத்திய, பிரச்னைகளை பார்த்த பின், இனி, எப்படிப்பட்ட பிரச்னைகளையும் சந்திக்க முடியும் என்ற, மனநிலைக்கு வந்துள்ளேன். முன்னாடியே, நான் கொஞ்சம் தைரியமானவ தான். இப்போ மீண்டும் அதை, பாலீஷ் பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.
உங்களை அடிக்கடி பார்ட்டிகளில் பார்க்க முடிகிறதே?
அந்த அளவுக்கு, தொடர்ச்சியாக பார்ட்டிக்கு போற பொண்ணு நான் இல்லை. எப்போவாவது போவேன். எனக்கு சீக்கிரம் சாப்பிட்டு துாங்கும் ஒரு பழக்கம் இருக்கு. ரொம்ப நேரம் கண் விழித்து இருந்தா, அடுத்த நாள் வேலை பார்க்க முடியாது. அதனால், நடு இரவு துாக்கம் இல்லாமல், நேரத்தைச் செலவிட மாட்டேன்.
உங்களுக்கு, பெரிய அரசியல் பின்னணியில் இருக்கும்,ஒருவரின் ஆதரவு இருப்பதாக சொல்கின்றனரே?
எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்ததுன்னு சொன்ன மாதிரி தான் இதுவும்.