ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாகை சூடவா இனியாவுக்கு அதன்பிறகு நாயகியாக நடித்த எந்த படங்களும் கைகொடுக்கவில்லை. அதனால் சமீபகாலமாக அவர் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதோடு, நினைத்தது யாரோ, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, ரெண்டாவது படம் ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.
தற்போது அவரது கையிருப்பாக ஜித்தன்-2, கரையோரம், வைகை எக்ஸ்பிரஸ், காதல் சொல்ல நேரம் இல்லை என பல படங்கள் உள்ளன. ஆனால், இந்த படங்கள் மீது இனியாவுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லையாம். அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றினால்தான் இன்னும் சில ஆண்டுகளாவது கோலிவுட் சினிமாவில் நீடிக்க முடியும் என்பதால், இரண்டாம் தட்டு ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், இதற்கு முன்பு படவாய்ப்புகளை பிடிக்க மேனேஜர்களை வைத்திருந்த இனியா, இப்போது நேரடியாகவே டீல் பண்ணுகிறார். சில மேனேஜர்கள் அவருக்கு வர இருந்த படங்களை வேறு நடிகைகள் பக்கம் திருப்பி விட்டதாலேயே இந்த முடிவுக்கு வந்திருக்கும் இனியா, ஆதி நடிக்கயிருக்கும் ஒரு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது சம்பளத்தில் பெரிதாக கெடுபிடி செய்யாத அவர், ஒரு குடும்பப் பெண் தவறான வழியில் செல்வதால் ஏற்படும் பிரச்சினைதான் இந்த படத்தின் கதை என்று சொன்னபோது, அதற்கு எந்தவித தயக்கமும் காட்டாமல், கதைக்கேற்ப நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறாராம்.
யாகவராயினும் நாகாக்க படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி, அடுத்து இந்த படத்தில் நாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது.