ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு தேசத்தில் பொது மேடையில் தமிழ் நடிகர் ஒருவரின் ரசிகன் நான் என ஒரு முன்னணி ஹீரோ பேசுவது மிகவும் ஆச்சரியமான விஷயம். அதுவும் மேடையில் இரண்டு சீனியர் நடிகர்களான வெங்கடேஷ், ஜெகபதிபாவு ஆகியோர் இருக்கும் போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான மகஷ்பாபு பேசுகிறார் என்றால் அதை தெலுங்கு மீடியாக்கள் நிச்சயம் வித்தியாசமாகவே பார்ப்பார்கள்.
இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற 'ஸ்ரீமந்துடு' இசை விழாவில்தான் நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மகேஷ்பாபு. பொதுவாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்றவர்களின் ரசிகன் என்றுதான் சொல்வார்கள். ஆனால், மகேஷ்பாபு அப்படியெல்லாம் பேசாமல் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சென்னையில் படித்து வளர்ந்த அவருடைய பாசம் தமிழ் நடிகரான கமல்ஹாசன் மீது இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
விழாவில் அவர் பேசியதாவது, “நான் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகன். அவர் மகளுடன் நான் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஸ்ருதிஹாசன் மிகத் திறமையான நடிகை. சிறப்பாக நடனம் ஆடுபவர், சிறந்த பாடகி, அவரிடம் நல்ல திறமைகள் உள்ளன. இந்தப் படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க,” என்றார் மகேஷ் பாபு.
தெலுங்கு தேசத்தில் பிறந்து தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களில் நடித்து வளர்ந்த சுரேஷ் போன்ற நடிகர்கள், 'பாகுபலியில் தமிழ் நடிகர்கள் நடிக்க வைத்ததைப் பற்றி தேவையில்லாத கருத்து சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டார்கள். இதைக் கூட அவரைப் போன்றவர்கள் ஏதாவது கமெண்ட் அடித்து அடுத்த விளம்பரத்தைத் தேடிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.