ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரிந்து வாழும் நட்சத்திரத் தம்பதியரான கமல்ஹாசன் - சரிகா ஆகியோரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது விஜய்யுடன் 'புலி', அஜித்துடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அடுத்து சூர்யாவுடன் 'சிங்கம் 3' படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என அதிர்ச்சியான தகவல் ஒன்றை அளித்திருக்கிறார்.
“திருமணம் பற்றி நான் என்றைக்கும் சிந்தித்ததே இல்லை. விருப்பங்களும், ஆசைகளும் இருவருக்கிடையே வித்தியாசப்படும் போது அவர்களால் திருமண வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது. இதுதான் பின்னர் பிரிந்து போவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அதனால் நான் திருமணமே வேண்டாம் என்ற முடிவில்தான் இருக்கிறேன்,” என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசனின் இந்தப் பேச்சு அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் அவருடைய அப்பா, அம்மா இருவரும் பிரிந்து வாழ்வது அவருக்குள் கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்றே யோசிக்கத் தோன்றுகிறது. தற்போது கூட மும்பையில் தனி வீட்டில் தனிமையில்தான் ஸ்ருதிஹாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனக்குத் தோன்றும் போது அப்பாவையும், அம்மாவையும் அவர் சந்திக்கிறார் என்றே சொல்கிறார்கள்.
பெற்றோர்களின் பிரிவு மகள்களின் மனதில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது நட்சத்திரமாக இருந்தாலும் சரி, சராசரி மனிதராக இருந்தாலும் சரி கவலைப்படாமல் இருக்க மாட்டார்கள்.