ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மானசீக காதல் என்ற படத்தில் அறிமுகமானவர் ஹம்சவர்தன். பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவர், அதைத் தொடர்ந்து புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இனிது இனிது காதல் இனிது, மந்திரன், பிறகு என பல படங்களில் நடித்தார். ஆனபோதும், 2007க்கு பிறகு அவருக்கு புதிதாக எந்த படமும் புக்காகவில்லை. அதனால், இப்போது தன்னை சினிமாவில் ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பட நிறுவனமேதொடங்குகிறார் ஹம்சவர்தன். அந்த நிறுவனத்திற்கு லேஷி பாய்ண்ட் கிரியேசன்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.
ஆகஸ்டு மாதத்தில் இந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் முதல் படத்தை தொடங்கும் ஹம்சவர்தன், சமீபத்தில் ஹிட் கொடுத்த சில இளவட்ட டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்து தனக்கு பொருத்தமான வித்தியாசமான கதைகளை ரெடி பண்ணுமாறு கேட்டுக்கொண்டு வருகிறார். அதோடு, மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோயினி மற்றும் காமெடியன்களையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஹம்சவர்தன்.