ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் மொழியின் பெயரைச் சொல்லி பிழைப்பவர்கள் தமிழுக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் ஓசைப்படாமல் சினிமா இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு அரியசெயலைச் செய்து முடித்திருக்கிறார். சினிமா இசையமைப்பாளர்களில் எளிமையானவர் இந்த பரத்வாஜ். பல வெறிப்படங்களுக்கு இசையமைத்த இவர் சிறிது காலம் புகழ் மறைவுப்பிரதேசத்தில் இருந்தார். இருந்தவர் சும்மா இருக்கவில்லை, திருக்குறளின் 1330 குறள்களுக்கும் இசையமைத்து முடித்து இருக்கிறர். வெறுமனே மெட்டுப் போட்டோம் பாடிப்பதிவு செய்து விடுவோம் என்று கருதாமல் பல முக்கியமான திரைப்பட, நாட்டுப்புற, கர்நாடக இசைப் பாடகர்களைப் பாட வைத்துள்ளார். இவர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஜானகி, சித்ரா, கார்த்திக், திப்பு, டி.எல்.மகராஜன், ஹரிணி, சிவசிதம்பரம், விஜய்ஜேசுதாஸ் மட்டுமல்ல கர்நாடக முன்னணிப் பாடகர்களும் இதில் அடக்கம்.
குறளுக்கு பொருள் தந்தவர்களில் பத்மா சுப்ரமணியம், நித்யஸ்ரீ, விஜய்சிவா, அபிஷேக் ரகுராம், சுசிசிவம், சாரதாநம்பி ஆரூரன், லேனாதமிழ்வாணன், சுதாசேஷயன் போன்றவர்களும் பிரபல தொழிலதிபர்களும் அடக்கம். இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், துபாய், தென்னாப்ரிக்கா, குவைத், இலங்கை, காங்கோ, மொரீஷியஸ் போன்ற பல நாடுகளிலிருந்தும் முக்கியமான தமிழ்ப் பிரமுகர்கள் குறள் விளக்கங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக யோசித்து பல்லாண்டு மெனக்கெட்டு இந்த காரியத்தைச் செய்து இருக்கிறார் பரத்வாஜ். முதலில் 380 குறள்கள் 380 பொருள்கள் என்று 760 பேர் குரல்களில் முதல் பகுதி தயாராகி விட்டது. இதன் வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டிருந்தார். தமிழ் முயற்சிதானே இதில் எந்த வியாபார சிந்தனையும் இல்லையே என்று தமிழ் என்று பேசும் பலரையும் அணுகிய போது யாரும் இதில் நினைத்தது போல எதிர்பார்த்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லையாம். இருந்தாலும் தன் முயற்சி தொடரும் என்றும் தனக்கான பெருமையை திருவள்ளுவரே தேடிக் கொள்வார் என்றும் நம்புகிறார் பரத்வாஜ்.