மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
லிங்கா படத்தை அடுத்து, கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்டகத்தி, மெட்ராஸ் பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மெட்ராஸ் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களே இந்தப்படத்திலும் பணியாற்ற வேண்டும் என்று பா.ரஞ்சித் வைத்த கோரிக்கையை ரஜினியும், தயாரிப்பாளர் தாணுவும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதனைத் தொடர்ந்து கதை டிஸ்கஷனுக்காக மலேஷியாவுக்குப் புறப்பட்டுச்சென்றுவிட்டார் ரஞ்சித். அவர் சொன்னபடி டெக்னீஷியன்களுடன் அக்ரிமெண்ட்போட்டு அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார் தாணு. ஏறக்குறைய அத்தனை டெக்னீஷியன்களும் ரஜினி படத்தில் பணியாற்றுவதை எண்ணி சந்தோஷமாக அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அட்வான்ஸை வாங்கிச் சென்றுள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மட்டும் தாணுவை சந்திக்க மறுத்துவிட்டார். காரணம்... அவரது சம்பளம் இறுதி செய்யப்படாததுதான். மற்ற படங்களுக்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி வரும் சந்தோஷ் நாராயணன், ரஜினி படம் என்பதால் 1 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு சம்பளம் தர தாணு விரும்பவில்லையாம். இந்த இழுபறி காரணமாக ரஜினி நடிக்கும் படத்துக்கு இன்னும் இசையமைப்பாளர் முடிவாகாமல் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். அதேசமயம், சந்தோஷ் நாராயணன் இந்த செய்தியை மறுத்திருக்கிறார்.