ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது அதனை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும், ரஜினியும் திருப்பித் தரவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு ரஜினியும், தயாரிப்பாளரும் இணைந்து 12.50 கோடி நஷ்டஈடு தர ஒப்புக்கொள்ளப்பட்டு, அந்த பணம் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்தப் பணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு போய் சேரவில்லை. எங்களுக்கு முதல் கட்டமாக தரப்பட்டது போக மீதி தொகை 6 கோடியே 61 லட்சத்தை தரவில்லை. அது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்பிமணியனும், மதுரை அன்பு செழியனும் ஒருவர் மாற்றி ஒருவரை கைகாட்டுகிறார்கள். நிஜத்தில் யாரிடம் பணம் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். மேலும் ஒருவார காலத்திற்குள் ரஜினி, வேந்தர் மூவிஸ்க்கு படம் பண்ண முடிவு செய்ய வேண்டும் இல்லையேல் ரூ.15 கோடி தர வேண்டும் என்று கெடுவும் விதித்துள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியதாவது: விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களிடையே ஒற்றுமையில்லை. பணம் பெறாத தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் ஒற்றுமையாக வந்தால் பணத்தை தரத் தயாராக இருக்கிறோம். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக வந்து பணம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அப்படி கொடுத்தால் பிரச்னை வரும். அவர்களே ஒரு முடிவு செய்துகொண்டு சேர்ந்து வரட்டும் பணத்தை கொடுத்துவிடலாம் என்கிறார் தாணு.