ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் அடுத்து ரஜினிக்கு ஒரு மெகா ஹிட் தேவைப்படுகிறது. அதனால் ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய சில முன்னணி இயக்குனர்கள் கதை சொல்லியிருந்தபோதும், அவர்களின் கதை மீது ரஜினிக்கு போதுமான நம்பிக்கை இல்லை. அதனால், இளவட்டங்களுடன் சேர்ந்து காலத்திற்கேற்ற ஒரு கதையில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்வோம் என்றுதான் ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ், மெட்ராஸ் ரஞ்சித், ராஜேஷ் எம். என பல இளவட்ட டைரக்டர்களை அழைத்து சீரியசாக கதை கேட்டார் ரஜினி. அதில் மெட்ராஸ் பட டைரக்டர் ரஞ்சித் சொன்ன ஒரு தாதா கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
ஆனபோதும், அந்த கதையில் தாதா வேடம் மட்டுமின்றி இன்னும் இரண்டு ஹீரோ கேரக்டர்களும் அந்த கதைக்குள் இருந்ததாம். அதில் நடித்தால் மூன்று ஹீரோக்களில் ஒருவராகத்தான் ரஜினி இருப்பாராம். விளைவு, ரஜினிதான் அந்த படத்தில் நடிக்கிறார் என்பது முடிவானதை அடுத்து, இப்போது ரஜினியின் தாதா வேடத்தை முன்வைத்து அந்த கதையை திருத்தம் செய்து கொண்டிருக்கிறாராம் இயக்குனர் ரஞ்சித்.
மேலும், ரஜினியை வைத்தே மெயின் ஹீரோவாக கதை உருவாக, மற்ற இரண்டு ஹீரோக்களின் கதாபாத்திரங்களும் ரஜினியை சார்ந்தே பயணிப்பது போன்று மாற்றப்பட்டு வருகிறதாம்.