ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இணையதளங்களில் ஆபாசமான போட்டோக்கள், வீடியோக்கள், செய்திகள் பரப்பினார் என பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கைநிறைய படங்களோடு சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த சூழலில் அவர் மீது மும்பை பெண் அஞ்சலி பாலன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, இணையதளங்களில் சன்னி லியோன் பற்றிய ஆபாச செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள் அதிகளவில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சன்னி லியோனின் இணையதளங்களில் இதுபோன்று அதிகம் உள்ளது. இதுபோன்ற விஷயங்கள் மக்கள் மனதை சிதைக்கும், அதோடு மட்டுமின்றி குழந்தைகள், இளைஞர்கள் கெடுவதற்கு வழிவகுக்கும். எனவே சன்னி லியோன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
போலீசாரும் அஞ்சலி பாலனின் புகார் மனுவை உடனடியாக ஏற்று முதற்கட்டமாக சன்னி லியோன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் சன்னி லியோனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.