சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
நடிகர் கமல்ஹாசனின் மகள் எனும் அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிஹாசன், நடிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி. சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி, இப்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
சிங்கம், சிங்கம்-2 வெற்றி படங்களை தொடர்ந்து ஹரி-சூர்யா கூட்டணியில், சிங்கம்-3யும் உருவாக இருக்கிறது. தற்போது படத்திற்கான முழு திரைக்கதையையும் எழுதிவிட்டார் ஹரி. இந்நிலையில், சிங்கம் படத்தில் அனுஷ்காவையும், சிங்கம்-2வில் அனுஷ்கா மற்றும் ஹன்சிகாவையும் நடிக்க வைத்த ஹரி, இம்முறை ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். ஏற்கனவே ஸ்ருதி ஹரி-விஷால் கூட்டணியில் வௌிவந்த பூஜை படத்தில் நடித்தார். இப்போது இரண்டாவது முறையாக ஹரியின் படத்தில் நடிக்கிறார்.
ஆக ஸ்ருதிஹாசன், சூர்யா மற்றும் ஹரியின் படங்களில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.