ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூகசேவையிலும் ஆர்வம் உடையவர். தனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஆதரவற்ற குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவ்வப்போது அந்த குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பார், சிலசமயம் அவர்களை சுற்றுலாவுக்கு எல்லாம் அழைத்து செல்வார். அதோடு மட்டுமின்றி ஆதரவற்ற முதியோருக்கு விடுதி கட்டவும் தயாராகி வருகிறார். இதுபோன்று சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கும் ஹன்சிகா இப்போது நேபாள மக்களுக்கும் நிதியுதவி அளித்துள்ளார்.
நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானார்கள். லட்சக்கணக்கான பேர் வீடு வாசலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் நேபாளம் நாட்டிற்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். ஹன்சிகாவும் நேபாள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.6 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
இதனிடையே நேபாளம் நாட்டில் இன்றும்(மே 12ம் தேதி) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும், ஏராளமான வீடுகள் இடிந்தும் தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்திலும் ஏராளமானபேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.