ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தில் அறிமுகமானவர் ரவி கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனான இவர் அதைத் தொடர்ந்து, சுக்ரன், பொன்னியின் செல்வன், கேடி, ஆரண்ய காண்டம் என பல படங்களில் நடித்தார். அதையடுத்து அவருக்கு சுத்தமாக படங்களே இல்லை. அவருக்காக கதை ரெடி பண்ணிக்கொண்டு சில இயக்குனர்கள் அவரது தந்தையான ஏ.எம்.ரத்னத்தை அந்த படங்களை தயாரிக்க சொன்னபோது, ஏற்கனவே கேடி படத்தை அவரை வைத்து தயாரித்து நஷ்டத்தில் இருந்த அவர், தொடர்ந்து நான் நஷ்டப்பட தயாராக இல்லை என்று மறுத்து விட்டார்.
தந்தையே மகனுக்காக படம் தயாரிக்க முன்வராததால் அதன்பிறகு ரவிகிருஷ்ணாவை நம்பி எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. அதனால் சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த ரவிகிருஷ்ணா, தற்போது நல்ல கதை கிடைத்தால் நடிக்கலாம் என்று சில டைரக்டர்களை அழைத்து கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார். ஆனால், அப்படி அவர் கதை கேட்கும் படத்தை கண்டிப்பாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கப்போவதில்லையாம். ரவிகிருஷ்ணாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள்தான் அந்த படத்தை தயாரிக்கிறார்களாம்.