பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சல்மானுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலர் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் நடிகை ஹன்சிகா தனது இதயமே நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகா தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, எனது இதயமே நொறுங்கிவிட்டது. பேசுவதற்கு வார்த்தைகள வர மறுக்கிறது. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இந்தமாதிரி சூழலில் அவரது குடும்பத்தார் தைரியமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.