ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட் ஹீரோக்களில் கதைக்காக தன்னை வருத்திக்கொள்வதில் விக்ரமுக்கு நிகர் யாருமே இல்லைதான் என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் சேது, காசி, அந்நியன் போன்ற படங்களில் கதைக்காக தனது பாடிலாங்குவேஜையே மாற்றி நடித்த விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக நடித்த ஐ படத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டிருந்தார்.
அதிலும் ஒரு கெட்டப்புக்காக தனது உடல் எடையை மிகப்பெரிய அளவில் குறைத்து தன்னையே அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி நடித்த விக்ரம், ஜிம்பாயாக நடித்த வேடத்திலும் இளவட்ட ஹீரோக்களுக்கு இணையாக உடலை வலுவாக மாற்றி நடித்திருந்தார்.
அவரது இந்த கடின உழைப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அதைவிட சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்கள் அவரை பிரமிப்பாக பார்த்தனர். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதற்கு முன்பு மான்கராத்தே படத்துக்காக அவர் ஓரளவு உடலை வருத்திக்கொண்டு நடித்ததை சிலர் பெருமையாக பேசினர்.
ஆனால், அதையடுத்து ஐ படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் மிரண்டு போனார். விக்ரமின் உழைப்பைப் பார்க்கையில் நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஓப்பனாக பேசினார். அதுமட்டுமின்றி, இப்போதும் தன்னைக்கவர்ந்த நடிகர் விக்ரம்தான் என்றும் பேட்டிகளில் கூறி வருகிறார். அதோடு, அவர் அளவுக்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றும் கூறி வருகிறார் சிவகார்த்திகேயன்.