ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு திரைப்படத்தை அற்புதமாக ரசிக்க வைப்பதற்கு பின்னணி இசையும் ஒரு முக்கியமான காரணமாக அமையும். தமிழ்த் திரையுலகில் இளையராஜா அளவிற்கு பின்னணி இசையை யாரும் சிறப்பாக அமைக்க மாட்டார்கள் என அனைத்து ரசிகர்களுக்குமே தெரியும். தன்னுடைய பின்னணி இசையால் ஒரு காட்சியின் உத்வேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்து விடுவார் இளையராஜா. அதற்கு உதாரணமாக எண்ணற்ற படங்களைச் சொல்லலாம். தற்போது தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் 'ருத்ரமாதேவி' படத்திற்கு இளையராஜா லண்டனில் பின்னணி இசையை அமைத்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பே லண்டன் சென்ற இளையராஜா அங்கு வெளிநாட்டு இசைக் கலைஞர்களுடன் படத்திற்கு இசையமைக்கும் வேலையை செய்து முடித்திருக்கிறார்.
அதற்கு மட்டும் சுமார் 2 கோடி வரை செலவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கும் இளையராஜா லண்டனில்தான் பின்னணி இசையை அமைத்தார். 'ருத்ரமாதேவி' ஒரு சரித்திரப் படம் என்பதாலும் படத்தில் மிரட்டலான பல காட்சிகள் இருப்பதாலும் வழக்கமான இசைக் கருவிகளுடன் இசையமைப்பதை விட வித்தியாசமான இசைக் கருவிகளுடன் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் லண்டனுக்குச் சென்றிருக்கிறார்கள். பின்னணி இசையில் பல வெளிநாட்டு இசைக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
நம்மைப் போலவே தெலுங்குத் திரையுலகத்தினரும் இளையராஜாவின் இசையை அதிகமாகவே கொண்டாடி வருகிறார்கள். தெலுங்கில் பல சாதனைப் படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.