ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படம் மே 1-ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இந்து கடவுளான பெருமாளை கிண்டல் செய்யும் காட்சிகள் இருப்பதாகவும், இதனால் இந்துக்கள் மனம் புண்படும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று விஷ்வ இந்து பரிசத் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதே கருத்தை ஆதரித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடாரஹீமும் புகார் கொடுத்துள்ளார். இவர் ஒருபடி மேலே சென்று மதங்களை இழிவுபடுத்தி படம் எடுக்கும் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் இது குறித்து படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் அளித்துள்ள விளக்கம் வருமாறு: யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் உத்தம வில்லன் படத்தில் இடம்பெறவில்லை. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கூத்து கலைஞனுக்கும் தற்கால சினிமா நடிகருக்குமான ஒரு வாழ்க்கையும், தொடர்பையும் சொல்லும் கமர்ஷியல் படம். படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து, பாராட்டி எந்த கட்டும் கொடுக்காமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல் படம் திட்டமிட்டபடி வெளிவரும் என்கிறார் ரமேஷ் அரவிந்த்.