ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிவிபி நிறுவனம் தமிழ், தெலுங்கில் நாகார்ஜூனா-கார்த்தியை வைத்து தயாரித்து வரும் படத்தில் கமிட்டாகி நடித்து வந்த ஸ்ருதிஹாசன், திடீரென்று அப்படத்தில் இருந்து விலகினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதையடுத்து தொடர்ந்து ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில், தற்போது நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை மீறி சில படங்களில் ஸ்ருதிஹாசன் சத்தமில்லாமல் நடித்துக்கொண்டிருப்பதாக பிவிபி நிறுவனம் சார்பில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆனால் இதற்கு ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மாறாக, தற்போது விஜய்யுடன் அவர் நடித்து வரும் புலி பட தரப்பில் இருந்து ஸ்ருதிஹாசனுக்கு சாதகமான பதில் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஸ்ருதி தற்போது எங்களது புலி படத்தில்தான் நடிக்கிறார். இது அவர் எப்போதோ ஒத்துக்கொண்டு நடித்து வரும் படம். அதனால் இந்த தடை உத்தரவுக்கும், எங்கள் படத்தில் அவர் நடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.