ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆண்ட்ரியா தனி நாயகியாக நடித்த முதல் படமான 'வலியவன்' படம் அவரை நன்றாக ஏமாற்றிவிட்டது. 'எங்கேயும் எப்போதும்' போன்ற படத்தைக் கொடுத்த இயக்குனர் சரவணனை நம்பி அவர் இந்தப் படத்தை நடிக்க சம்மதித்துள்ளார். அதோடு, முதன் முறையாக ஒரு படத்தில் தனி நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாலும் 'வலியவன்' படத்தில் நடிக்க சம்மதித்தேன் என படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தெரிவித்திருந்தார். ஆனால், படம் வெளிவந்து சில நாட்களிலேயே 'பார்சல்' ஆகிவிட்டது.
ஆண்ட்ரியா அறிமுகமான 'பச்சைக் கிளி முத்துச்சரம்' படத்தில் ஜோதிகாவுடனும், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ரீமா சென்னுடனும், 'மங்காத்தா' படத்தில் த்ரிஷா, அஞ்சலியுடனும், 'விஸ்வரூபம்' படத்தில் பூஜா குமாருடனும், 'என்றென்றும் புன்னகை' படத்தில் த்ரிஷாவுடனும், 'அரண்மனை' படத்தில் ஹன்சிகா, லட்சுமிராயுடனும் என 'வலியவன்' படத்திற்கு முன் வரை இரண்டு, மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரியா ஆவலுடன் எதிர்பார்த்த அவருடைய முதல் தனி கதாநாயகிப் படமான 'வலியவன்' அவருக்கு மறக்க முடியாத வலியைக் கொடுத்து விட்டது.