ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தண்டாயுதபானி, நாயகன் படங்களை இயக்கிய சரவண சக்தி இப்போது முழு நேர நடிகராகிவிட்டார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது இயக்கி உள்ள படம் சூறக்காத்து. நந்தகுமார் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவர்தான் தயாரிப்பாளர். அவருக்கு ஜோடியாக லீமா நடிக்கிறார். கேசவ் கேமராமேன், பரிமளவாசன் மியூசிக் டைரக்டர்.
"நிறைய பேய் படங்கள் வருகிறது. அவை ஒரே மாதிரி கதையை கொண்டவை. ஒரு பாழடைந்த பங்களா, அல்லது அடர்ந்த காடு, அல்லது ஒரு ஆலமரம் இதைச் சுற்றித்தான் பேய் கதைகள் இருக்கும். இது வித்தியாசமான பேய் படம். ஹீரோ வெளியூரில் வேலை பார்க்கிறவன். பல வருடங்களுக்கு பிறகு ஊருக்கு சென்றால் அங்கு பேய் பலரை அடித்து கொலை செய்திருக்கிறது. ஊரே பேய் பயத்தில் இருக்கிறது. பகுத்தறிவுவாதியான ஹீரோ பேய் இல்லை என்பதை மக்களுக்கு நிரூபிக்க கொலைக்கான காரணங்களை தேடுகிறான்.
அப்போதுதான் பேய் பெயரை சொல்லி ஒரு கும்பல் கொலை செய்து வருதை கண்டுபிடிக்கிறான். அந்த கும்பல் இவனை கொன்று விடுகிறது. அதன் பிறகு பேயாக வரும் ஹீரோ வில்லன்களை எப்படி பழிவாங்குகிறான் என்பதுதான் கதை. அதாவது பேயே இல்லை என்றவன் பேயாக மாறி பேய் இருக்கு என்பதை உணர்த்துகிற கதை" என்கிறார் சரணவணன் சக்தி.