ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காவ்யா மாதவன் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 'ஆகாசவாணி' மற்றும் 'ஷி டாக்ஸி' என இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதில் 'ஆகாசவாணி'யில் படித்த, நவநாகரிக பெண்ணாக நடித்திருக்கிறார் என்றால் 'ஷி டாக்ஸி'யில் இவரது கேரக்டர் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. படிப்பு சரியாக வராமல் பத்தாம் வகுப்பு பெயிலாகி வீட்டிலிருக்கும் காவ்யாவுக்கு, ட்ரைவரான தனது தந்தை இறந்தபின் குடும்பத்தை காப்பாற்ற தந்தை பார்த்த ட்ரைவர் பணியையே தொடர வேண்டிய கேரக்டர்.. இரண்டிற்கும் அவ்வளவு பிரமாதமாக வித்தியாசம் கட்டியிருக்கிறாராம் காவ்யா மாதவன்.
சரி மற்ற மலையாள நடிகைகளைப்போல காவ்யா மாதவன், பிற தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லையே.. ஏன் என கேட்டால் வித்தியாசமான விளக்கம் வருகிறது அவரிடமிருந்து. “நான் முன்னெல்லாம் மற்ற மொழிகளிலும் நடிப்பது குறித்து யோசிப்பேன். அட்லீஸ்ட் வருடத்திற்கு ஒரு படமாவது வேறு மொழிகளில் நடிக்கும் எண்ணம் இருந்தது உண்மை தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளேன்..
ஆனால் போகப்போக எனக்கு தெரிந்த, நான் வசதியாக உணர்கின்ற இந்த மலையாள இண்டஸ்ட்ரியை விட்டு வேறெங்கும் போக மனம் வரவில்லை.. ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு வந்தால் அங்கே எனக்கு தெரிந்த முகங்களாக இருக்கவேண்டும்.. நான் சொந்த ஊரில், சொந்த வீட்டில் இருப்பதைப்போல உணரவேண்டும். ஹோம்சிக் என்றுகூட வைத்துக்கொள்ளுங்களேன்.. தவிர எனக்கு என்னையே சுயமாக புரமோட் செய்துகொள்ள தெரியாது” என்கிறார் காவ்யா மாதவன்.