ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாண்டிய நாடு' படத்திற்குப் பிறகு, இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பமானது. விஷால் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் இந்தப் படத்தில் நடிக்கிறார். விஷால் நடிக்கும் ஒவ்வொரு படமுமே தமிழில் தயாரிக்கப்பட்டாலும், தெலுங்கில் உடனே டப்பிங் ஆகி வெளியாகிறது. அதனால் இந்த முறை தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நாயகியாக காஜல் அகர்வாலை நாயகியாக நடிக்க வைக்கின்றனர்.
இந்த படத்தில் விஷால், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் 'சத்யம், வெடி' படங்களிலும் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த இரண்டு படங்களுமே விஷாலுக்கு தோல்விப் படங்களாகத்தான் அமைந்தது. அதனால்தானோ, என்னவோ இந்தப் படத்தில் 'அன்டர் கவர்' ஆபீசர் கதாபாத்திரத்தில் விஷால் நடிப்பதாகச் சொல்கிறார்கள்.
இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு இப்போதே நிறைய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'பாண்டிய நாடு' படத்தின் வெற்றியையும் மீறி இந்தப் படத்தை மேலும் சிறந்த வெற்றிப் படமாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்களாம்.