சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சாதாரணமாகவே நடிகைகள் படப்பிடிப்பு தளங்களில் கேரவனை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால் தற்போது வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டது. அதனால் வெயில் எந்த நடிகைகளுக்கெல்லாம் அலர்ஜியோ அவர்களெல்லாம் உஷாராகி வருகிறார்கள். குறிப்பாக, தோல் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு வரும் சமந்தா, இப்போது ஷாட் முடிந்த கையோடு ஓட்டமாக ஓடிச்சென்று கேரவனுக்குள் தலைமறைவாகிக்கொள்கிறார். ஆனால் தமன்னாவோ, வெளியில் தலைகாட்டவே பயப்படுகிறார்.
காரணம், அவருக்கு வெயில் சீசன் என்றால் அலர்ஜியாம். அதனால் தற்போது வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படப்பிடிப்பில், ஷாட் ரெடியாகி விட்டது என்று உதவி இயக்குனர்கள் கேரவன் கதவை தட்டினாலே, தனது உதவியாளர்களை உள்ளே அழைத்து, தான் வெளியே வந்ததும், ஒரு துளி வெயில்கூட தன்மீது படாதவாறு குடைகளை பிடித்தபடிதான் கேமரா முன்பு வருகிறாராம்.