ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் வெளிவந்த 'ஆம்பள' திரைப்படம் 'ஐ' படத்துடன் போட்டி போட்டாலும் நல்ல வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. அந்த வெற்றியை பத்திரிகையாளர்களுடன் நேற்று 'ஆம்பள' குழுவினர் பகிர்ந்து கொண்டனர். படத்தின் பெயருக்கேற்றபடி நேற்றைய நிகழ்ச்சியில் வெறும் நடிகர்கள் மட்டுமே இருந்தனர். இயக்குனர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, தயாரிப்பாளர், படத்தின் நாயகன் விஷால், வைபவ், சதீஷ், அபிஷேக், ஸ்ரீமன், கௌதம், விச்சு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த், வசனகர்த்தா ராதாகிருஷ்ணன் என மேடையில் வெறும் 'ஆம்பள' நடிகர்கள் மட்டுமே இருந்தனர். நல்ல வேளையாக நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாக நடிகை ஐஸ்வர்யா வந்து மேடையில் ஒரே 'பெண்' நடிகையாக அமர்ந்தார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் சுந்தர்.சி பதிலளிக்கையில் மீண்டும் இந்த வருடக் கடைசியில் விஷாலுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கப் போகிறேன். நீண்ட நாட்களாக 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப் போல ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. விஷாலுடன் இணையப் போகும் படத்தை அந்த மாதிரிதான் கொடுக்க உள்ளேன். ஏழு, எட்டு நாடுகளில் அதற்கான படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்,” என்றும் சுந்தர்.சி தெரிவித்தார்.