14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தெலுங்கு பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி 200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் பாகுபலி. அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதில் அனுஷ்கா ஒரு நாட்டின் இளவரசியாக நடிக்கிறார், அவரது தங்கையாக அதிதி செங்கப்பா நடிக்கிறார்.
அதிதி பெங்களூரைச் சேர்ந்தவர் அவரது தந்தை ஒரு பத்திரிக்கை ஆசிரியர், தெலுங்கு படங்களில் நடித்த அதிதி, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப்பட படம் இன்னும் ரிலீசாகவில்லை அதன் பிறகு ரா என்ற பேய் படத்தில் நடித்தார். தற்போது மதுமிதா இயக்கும் மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பாகுபலியில் அனுஷ்காவின் தங்கையாக நடிக்கிறார்.
இதுபற்றி அதிதி கூறியதாவது: இந்திய சினிமாவின் முக்கிய அடையாளமாக இருக்கப்போகும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. அனுஷ்காவின் தங்கை கேரக்டருக்கு ராஜ மவுலிசார் நிறைய பேருக்கு ஆடிசன் வைத்தார் அதில் நானும் கலந்து கொண்டு தேர்வானேன். அதன்பிறகு குதிரையேற்றம், வாள் சண்டை கற்றேன். நிஜத்தில் இளவரசியாகும் வாய்ப்பு இல்லை, நிறைய நகைகள் அணிந்து விலை உயர்ந்த ஆடைகள் அணிந்து நடித்த அந்த நாட்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவை. அனுஷ்காவும் நான் நடிக்க நிறைய டிப்ஸ் கொடுத்தார் நிஜமாகவே அவரை ஒரு அக்காபோல உணர்ந்தேன் என்கிறார் அதிதி.