ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியத் திரையுலகில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் பிரகாஷ்ராஜ். சமீபகாலமாக படங்களை இயக்கி நல்ல இயக்குனராகவும் பெயர் வாங்கி வருகிறார். இவருக்கும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனு வைட்லாவுக்கும் இடையே 'ஆகாடு' படம் ஆரம்பமானதிலிருந்தே பிரச்சனை இருந்து வந்தது. ஒரு உதவி இயக்குனருடன் பிரகாஷ்ராஜுக்குப் பிரச்சனை எழ, அதன் பின் அந்தப் படத்திலிருந்து பிரகாஷ்ராஜும் நீக்கப்பட்டார். ஆனால், அந்தப் படத்திலிருந்து தானாகவே விலகி விட்டதாக பிரகாஷ்ராஜ் அறிவித்தார். அடுத்து பிரகாஷ் ராஜ் மீது தெலுங்கு நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது, பின்னர் சிலரின் தலையீட்டால் அந்தப் பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
மகேஷ் பாபு நடித்த 'ஆகாடு' படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, 'ஆகாடு' படத்தின் இயக்குனர் சீனு வைட்லா மீது பல புகார்களைக் கூற, பதிலுக்கு சீனு வைட்லாவும் பிரகாஷ்ராஜ் மீது பல புகார்களைக் கூற சில நாட்களுக்கு அந்தப் பிரச்சனை கொழுந்துவிட்டு எறிந்தது.
தற்போது சண்டை போட்ட அவர்களிருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் படங்களில் பிரகாஷ்ராஜ் கண்டிப்பாக இடம் பெறுவார். அடுத்து ராம் சரண் நடிக்கும் படத்தை சீனு வைட்லா இயக்கவிருப்பதால், அந்தப் படத்தில் பிரகாஷ்ராஜை நடிக்க வைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கிறார்களாம். சிரஞ்சீவியும், சீனு வைட்லாவிடம் சமசரமாகப் போகும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து சண்டைக் கோழிகளாக இருந்தவர் இவர்கள் விரைவில் சமாதானப் புறாவை பறக்க விடுவார்களா என தெலுங்குத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.