ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹன்சிகாவின் சம்பளம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அரண்மனை படத்துக்குப் பிறகு 1.5 கோடி சம்பளம் வாங்கி வந்த ஹன்சிகா, இப்போது இரண்டு கோடி சம்பளம் கேட்கிறாராம். அரண்மனை படத்துக்குப் பிறகு ஹன்சிகா நடித்த படம் எதுவும் வெளிவரவில்லை. மீகாமன் படம் டிசம்பர் 25 அன்றுதான் வெளிவர உள்ளது. அதற்குள் 50 லட்சம் சம்பளத்தை உயர்த்தியது ஏன்? ஹன்சிகா தற்போது நடித்து வரும் மீகாமன் மற்றும் ஆம்பள படங்கள் நிச்சயம் ஹிட்டாகுமாம். இப்போது பழைய சம்பளத்துக்கு நடிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டால், வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை ஏற்ற முடியாமல் போகுமே..எனவேதான் முன் கூட்டியே சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். சினிமாவில் மட்டுமல்ல, விளம்பரப்படங்களுக்கும் பெரிய பில்லைத்தான் போடுகிறார் ஹன்சிகா. அண்மையில் வாஷிங் பவுடர் ஒன்றின் ஆட் பிலிமில் நடிக்க 50 லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார் ஹன்சிகா. அதாவது 4 நாள் படப்பிடிப்புக்கு 50 லட்சம். ஹன்சிகாவைவிட அவரது அம்மா பண விஷயத்தில் படு கறாராக இருக்கிறாராம். இன் பிலிம் ஆட் என்கிற விளம்பர பொருட்களை ஹன்சிகா பயன்படுத்துவதுபோல் படத்தில் நடிக்க வேண்டுமானால் அதற்கு தனியாக பணம் வேண்டும் என்று கேட்கிறார் ஹன்சிகாவின் அம்மா. சமீபத்தில் ஒரு பெரிய படத்தில் ஒரு பிராண்டை பயன்படுத்துவதுபோல் ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது. அந்தப் பொருளை படத்தில் பயன்படுத்த 25 லட்சம் பணம் வாங்கினாராம் தயாரிப்பாளர். இதைக் கேள்விப்பட்ட ஹன்சிகாவின் அம்மா 25 லட்சத்தில் பாதியை கொடுத்தால்தான் அந்த பிராண்டை ஹன்சிகா அணிந்து நடிப்பார். இல்லை என்றால் நடிக்க மாட்டார் என்று தகராறு செய்துள்ளார்.