ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் கஸ்தூரிராஜாவிடத்தில் உதவியாளராக இருந்தவர் ராயப்பராஜா. இவர் தற்போது புதுமுகம் சாசுவத்- ஆத்மியா நடிப்பில் வெப்பச்சலனம் என்ற படத்தை இயக்கியுள்ளார். விவசாயிகளின் தற்கொலையை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.
இதுபற்றி டைரக்டர் ராயப்ப ராஜா கூறுகையில், ஒரு சோற்றை உருவாக்க ஒரு துளி ரத்தத்தை சிந்துகிறான் விவசாயி. அவன் உடம்பில் வழிவது வியர்வை இல்லை. ரத்தம் என்பது போன்ற உயிர்ப்பான வசனங்களுடன் இந்த வெப்பச்சலனம் படத்தை இயக்கியிருக்கிறேன். முக்கியமாக, விவசாயம் செய்ய போதுமான மழை இலலை. அதனால் பயிர் செய்தாலும் விவசாயிக்கு வருமானம் இல்லை. அதனால் ஒவ்வொரு முறை விவசாயம் செய்யும்போதும் கடன் வாங்க வேணடிய கட்டாயததுக்கு ஆளாகிறான் விவசாயி.
அதேசமயம், இந்த கடனை குறித்த காலத்தில் கொடுக்க முடியாத நிலை ஏறபட்டால் தற்கொலை செய்து கொளகிறான். காரணம் விவசாயிகளுக்கு மானம் அதிகம். அதோடு, சமீபகாலமாக இருக்கிற நிலங்களையெல்லாம் கட்டிங்கள் கட்டி வருகிறார்கள். இதனால் எதிர்கால சந்ததிகள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. இதுபோன்ற பல பிரச்சினைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.
மேலும், அடுத்து வரக்கூடிய சந்ததிகளின் மூனு வேளையும் பீட்சா பர்கரெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு வாழ முடியாது. 80 சதவிகித குழந்தைகள் சுகாதாரமின்றி நோயாளிகளாக பிறக்கிறது. அந்த அளவுக்கு உணவுகளின் மாற்றம் ஆரோக்யமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றன.
அதோடு, இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள் என்று காந்தி சொன்னார். அந்த கிராமங்களில் செய்யப்பட்டு வருவதுதான் விவசாயம். ஆக, அவர் சொன்னதுபோல், கிராமங்கள் முன்னேறும்போதுதான் அந்த நாடு வல்லரசாக முடியும். இல்லையேல் செர்லலிக்கொண்டுதான் இருக்க முடியமே தவிர, அதை நடைமுறைப்படுத்த முடியாது எனறு சொல்லும் இயக்குனர் ராயப்ப ராஜா, இந்த வெப்பச்சலனம் படத்தை யாரேனும் அரசியல்வாதிகள் பார்த்து அதை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றால், இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது என்கிறார்.