ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவைப்பொறுத்தவரை வெற்றிதான் அவர்களை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. அந்த வகையில், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடியில் நடித்த சூரி இப்போது சந்தானத்துக்கு அடுத்தபடியான இடத்தை பிடித்திருக்கிறார். முக்கியமாக விமல், சிவகார்த்திகேயன், விதார்த், என சில ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக காமெடி செய்து வருபவர், வேலாயுதம் படத்தையடுத்து ஜில்லாவிலும் விஜய்யுடன் நடித்து மார்க்கெட்டில் ஒரு இடத்தை பிடித்துககொண்டார்.
அதனால், இப்போது அவரும் கமர்சியல் வட்டத்துக்குள் வந்திருக்கிறார். முக்கியமாக அவர் நடித்துள்ள சிறிய ஹீரோக்களின் படங்கள் அவரது பெயரை முன்வைத்துதான் வியாபாரம பேசப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், டைரக்டர் எழில் இயக்கிய மனம் கொத்திப்பறவை, தேசிங்கு ராஜா படங்களில் காமெடியனாக நடித்த சூரி தற்போது அவர் விக்ரம் பிரபுவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள வெள்ளக்கார துரை படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு இதுவரை காமெடி கதைகளில் நடித்ததில்லை என்பதால், விக்ரம்பிரபுவின் தந்தையான பிரபு, ஒருநாள் சூரியை தொடர்பு கொண்டு, விக்ரம்பிரபு இந்த படத்துலதான முதன்முறையாக காமெடி ட்ரை பண்றாரு. அவருக்கு கொஞ்சம காமெடியில ஒத்தாசையா இருங்க என்று கேட்டுக்கொண்டாராம்.
மேலும், விக்ரம்பிரபுவும் தான் சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் என்கிற மனநிலை இல்லாமல், படம் முழுக்க தன்னுடன் நடித்திருக்கும் சூரியிடம் நெருங்கி பழகியதோடு, காமெடி காட்சிகளை அவருடன் இணைந்து ரிகர்சல் எடுத்தபடி நடித்துள்ளாராம். அதனால், இதுவரை ஆக்சன் கதைகளில் ஸ்கோர் பண்ணிவந்த விக்ரம்பிரபு காமெடியில் முதல் படத்திலேயே ஸ்கோர் பண்ணியிருப்பதாக சொல்கிறார் டைரக்டர் எழில்.