ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லிங்கா படம் வெளியிட இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. தங்கள் நிறுவனம், தெலுங்கு மொழியில், சிரஞ்சீவி, சோனாலி பிந்த்ரே நடித்த இந்திரா திரைப்படத்தை, தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளது. இந்திரா படத்தின் கதையை கொண்டே, தற்போது லிங்கா படம் உருவாக்கப்பட்டுள்ளது. லிங்கா படம் வெளியானால், தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே, லிங்கா படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பாலாஜி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, லிங்கா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "லிங்கா படத்தின் இயக்குனர் பணியை மட்டுமே செய்துள்ளேன். தெலுங்கில் வெளியான இந்திரா படத்தின் கதைக்கும் லிங்கா படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியாவில் உள்ள அணைகள் குறித்து திரைப்படம் எடுக்க எல்லாருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமென்றாலும் கதை மற்றும் திரைக்கதையை எழுதலாம். இந்த வழக்கை தொடர்வதன் மூலம், லிங்கா படத்தில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டும் விதமான நடவடிக்கையில் மனுதாரர் இறங்கியுள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்," என்று கூறியிருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுப்பையா, லிங்கா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.