ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் ஆர்த்தி என்ற ப்ளஸ்-2 மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அவரை அதற்கடுத்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் கல்லூரி மாணவியாக்கினார் சுசீந்திரன். அதையடுத்து ஜன்னல் ஓரம் படத்தில் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார் மனீஷா.
இந்த படங்களில் அவரது நடிப்பு கோடம்பாக்க டைரக்டர்களை கவர்ந்து வந்த நிலையில், பலரும் அவரிடம் கதை சொல்ல படையெடுத்து வந்தனர். ஆனால், அந்த நேரம் பார்த்து சீனுராமசாமியின் இட்ம் பொருள் ஏவல் படத்தில் இருந்து அவர் வெளியேறினார். அப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியானதால் மனீஷாவை புக் பண்ண சென்றவர்களெல்லாம பிரச்சினைக்குரிய நடிகையாக இருப்பார் போலிருக்கே என்று பின்வாங்கினர்.
அதனால் இப்போது பெரிய அளவில் படங்கள் இல்லாத நிலையில் இருக்கிறார் மனீஷா யாதவ். தற்போது சில புதிய கம்பெனிகளுக்கு நேரடியாக விசிட் அடித்து தீவிரமாக பட வேடடை நடத்தி வருகிறார். அப்படி செல்லும்போது, தான் தமிழ் பேசினால் லோக்கல் நடிகை என்று சாதாரணமாக நினைத்து விடுவார்கள் என்று தான் மும்பை நடிகை போன்று காட்டிக்கொள்கிறாராம் மனீஷாயாதவ்.
அதோடு, தான் சென்னையில் வளர்ந்த பெங்களூர் பெண் என்பதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாாம் என்றும் தனது உதவியாளர்களிடம் கண்டிசன் போட்டுள்ளாராம் நடிகை.