ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர் நடிகர் நானா படேகர். இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே - தி ரியல் ஹீரோ என்ற மராத்தி படத்தில், பாபா ஆம்தேயின், மகன் டாக்டர் பிரகாஷ் ஆம்தேயாக சிறப்பாக நடித்து பாராட்டுகளை பெற்றவர். இப்படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு எல்லோராலும் பாராட்டப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நானா படேகர், பாபா ஆம்தேயின் வாழ்க்கையை பற்றி படமாக எடுக்கவுள்ளேன். இதில் நானே நடித்து, இயக்கி, தயாரிக்கிறேன். பாபா ஆம்தே மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆம்தே என இரட்வை வேடங்களில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தை ஆரம்பிக்க இன்னும் ஓர் ஆண்டுகளாகும்.
பாபா ஆம்தே பெரிய ஜமீன்தாரராக, வக்கிலாக, மனித கழிவை தலைமேல் தூக்கி செல்லும் பணியாளர்களின் யுனியன் லீடராகவும் இருந்தவர். யாரோ சிலர் துப்பரவு தொழிலாளிகளுக்கு தலைவராக இருப்பது சுலபம், துப்பரவு தொழிலை செய்வது தான் கஷ்டம் என்று பேசிவிட்டனர். உடனே தானே மனித கழிவை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். ஒரு சமயம் அவர் மனித கழிவை தலை மீது தூக்கி செல்லும்போது திடீரென்று மழை வந்துவிட்டது. மழைநீர் பட்டு அந்த கழிவு தலைவழியாக அவரது முகத்திலும் வழிய ஆரம்பித்தது. அதேசமயம் குஷ்டரோகத்தினால் பாதிக்கப்பட்டு சாக்கடையில் விழுந்து கிடக்கு ஒருவரை பாபா ஆம்தே பார்க்கிறார். அவரை மிகவும் பாதிக்கிறது. அஜாந்தா எல்லோரா குகைகளில் உள்ள சிற்பங்களில் அழகை பார்க்க முடியும் என்றால், உயிருடன் இன்னும் இருக்கும் குஷ்டரோக நோயாளியிடம் ஏன் பார்க்க முடியாது.? அந்த நிகழ்வுகளில் இருந்து குஷ்டரோகி நோயாளிக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்தார் பாபா ஆம்தே. அவருடைய குடும்பமும் அவருக்கு முழுமையாக பக்க பலமாக இருந்தது.
பாபா ஆம்தேயின் குடும்பத்துடன் எனக்கு 42 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அந்த நெருக்கம், இந்தப்படத்தில் நடிக்க எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்கிறார் நானா படேகர்.
மிருகங்களுடன் தொடர்பு கொள்ளும் டெக்னிக் பிரகாஷ் ஆம்தேக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. பெரிய ஆண் சிங்கம் ஒன்றை மூன்றே மணிநேரத்தில் நண்பனாக்கிவிட்டார். முதல் இரண்டு மணிநேரம் சிங்கத்தை பார்த்து கொண்டே இருந்தார், பிறகு அந்த சிங்கம் அவர் அருகில் வந்து பரிவு காட்டியது. அப்படி என்ன மேஜிக் செய்தாரோ தெரியவில்லை!
பல கமர்ஷியல், வியாபார ரீதியான படங்களை நான் செய்திருக்கிறேன். அதேப்போல் டாக்டர் பிரகாஷ் போன்றோர் மூலம் ஆம்தே - தி ரியல் ஹீரோ போன்ற மாறுபட்ட படங்களையும் செய்கிறேன். இந்த தருணத்தில் இப்படி ஒரு படத்தில் நான் நடித்திருப்பது சரியாக தோன்றுகிறது. இதற்கு முன்னர் இப்படி ஒரு படத்தில் நடித்திருந்தால் அதற்கான மெச்சூரிட்டி எனக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
இவ்வாறு கூறினார்.
நானா படேகருக்கு மீடியா தவிர ரசிகர்களிடையேயும் பெரிய வரவேற்பு இருந்தது. ரசிகர்களிடமும் பேசி, அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார்.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -