ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் கடந்த மாதம் வீசிய ஹுட் ஹுட் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போதே தெலுங்குத் திரையுலகத்தினர் மற்றும் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சூர்யா, கார்த்தி, விஷால் போன்றோர் நிவாரண நிதிகளை வழங்கினர். சில தெலுங்கு நடிகர்கள் விசாகப்பட்டிணத்திற்கே சென்று நேரடியாக பல நலத் திட்ட உதவிகளையும் செய்தனர். தற்போது தெலுங்குத் திரையுலகினர் ஒன்று சேர்ந்து வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் 'மேமு சைதம்' என்ற மாபெரும் தொடர் மாரத்தான் கலை நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தெலுங்குத் திரையுலகின் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டு அதற்கு ரிகர்சலும் நடத்தி வருகிறார்கள்.
இதில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஷால் இன்னும் சிலரையும் அழைத்திருக்கிறார்களாம். ரஜினிகாந்த் தவிர மற்றவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டார்களாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த் ஆகியோர் தமிழ்த் திரையுலகினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் வருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதைப் பற்றி இன்னும் ஒன்றும் தெரிவிக்கவில்லையாம். அவரும் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் உள்ளதாகத் தெரிகிறது.
'லிங்கா' திரைப்படம் அடுத்த மாதம் 12ம் தேதி தெலுங்கிலும் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து அவர் கண்டிப்பாகக் கலந்து கொள்வார் என ஒரு சாரார் சொல்லி வருகிறார்களாம்.