ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரோஜா படத்தில் அப்பாவி கிராமத்து பெண்ணாக அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட மதுபாலா அதன் பிறகு மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்த மதுபாலா, திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினர் ஆவார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டி.வி., சீரியலில் நடிக்க வந்துள்ளார், மதுபாலா. குட்டி பத்மினியின் கணவர் பிரபு நேபால் தயாரித்து, இயக்கும் செளந்தரவல்லி என்ற மெகா தொடரில் நாயகியாக நடிக்கிறார் மதுபாலா. இதில் தாசிகுலத்தின் அவலத்தைத் துடைத்து சமூக நீதிக்காக போராடும் கேரக்டரில் மதுபாலா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்ததால் முதல் ஷூட்டிங்கின்போது சற்று பதட்டமாக இருந்ததாம் மதுபாலாவுக்கு. முதல் காட்சிக்கு நான்கு டேக்குகள் வாங்கி உள்ளார். அதன் பின்னர் படிப்படியாக இயல்பாகி ஒரே டேக்கில் ஓ.கே., செய்ய ஆரம்பித்து விட்டார். இது எனக்கு ரீ எண்ட்ரி. டிவி தொடரில் நடிப்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இதுவும் நடிப்புதான். நான் டிவியில் நடிப்பதை எனது தோழிகளான ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் வரவேற்று உற்சாகப்படுத்தி உள்ளனர் என்றார் மதுபாலா.