ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அப்படத்தின் இயக்குனர் செளந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் பங்கேற்றனர்.
கோவா கலா அகாடமியில், கோச்சடையான் படம் திரையிடப்பட உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக விழா நிர்வாகிகளால் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. பின் படம் திரையிடும் அரங்கம் குறித்த அறிவிப்பில், ரஜினி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
சொந்த பணி காரணமாக, ரஜினி பெங்களூருவிற்கு சென்று இருப்பதால், அவரால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின் செளந்தர்யா பேசியதாவது, கோச்சடையான் எனது இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல் படம். முதல் படமே, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது. போட்டோ- ரியலிஸ்டிக் தொழில்நுட்ப முறையில் படமாக்கப்பட்டிருக்கும் முதல்படம் இது என்றும், மற்றும் இந்த தொழில்நுட்பத்தை, தான் அறிமுகப்படுத்த வாய்ப்பு அளித்த ரஜினிக்கு, இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக செளந்தர்யா கூறினார்.