ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தி தொலைக்காட்சி சேனலில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் சத்யமேவ் ஜெயதே என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 19ந் தேதி ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமை பற்றிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஆமீர்கான் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினாராம்.
"இந்திய அரசியல் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கை குற்றச் செயலாகும். அண்மையில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒன்றில் இதனை உறுதி செய்தது. இந்த நிலையில் ஆமீர்கான் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருப்பது தடுக்கப்பட்ட ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதாகும். கோர்ட் தீர்ப்பையும், இந்திய அரசியல் சட்டத்தையும் அவமானப்படுத்துவதாகும்" என்று அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மந்தீப் கவுர் என்பவர் சண்டிகர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வரும் டிசம்பர் 19ம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஆமீர்கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.