ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் தன் ஒளிப்பதிவால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அசோக்குமார். இயக்குனர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், உதிரிபூக்கள், முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்கள் அவரது ஒளி ஓவியத்தில் உருவானவை. ஒளிப்பதிவாளர் அசோக்குமார் தற்போது தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிற்குள் முடங்கிவிட்டார். கடந்த 6 மாதமாக அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தற்போது அவரை வீட்டில் வைத்து கவனித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அசோக்குமாரின் மகன் ஆகாஷ் அசோக்குமார் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் தந்தைக்கு கடந்த 6 மாதமாக உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சென்னையிலும், ஐதராபாத்திலும் மாறி மாறி சிகிச்சை அளித்தோம். கடந்த ஒரு வாரமாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். அப்போது இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவை நல்ல முறையில் உதவினார்கள். அது எங்களுக்கு தெம்பை கொடுத்தது.
தற்போது வீட்டில் வைத்து அவரை கவனித்து கொண்டிருக்கிறோம். இதனால் எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால். என் தந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் திரையுலகினர் தங்களால் முடிந்த வழியில் அவருக்கு ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு ஆகாஷ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.