ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தடை செய்ய கோரி, மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி தள்ளுபடி செய்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் கத்தி. இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரண் தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷே உடன் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, பிரவீன் காந்தி இயக்கத்தில், புலிப்பார்வை என்ற படம் தயாராகியுள்ளது. இதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. இந்தப்படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் தடை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில், ரமேஷ் என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரண், ஒரு படம் தணிக்கையான ஆன பிறகு அதில் தலையிட முடியாது, எனவே இந்தப்படங்களுக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.