ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபத்தில் வெளிவந்த குர்சூரத் படத்தின் நாயகியான சோனம் கபூர், தனது சினிமா வாழ்க்கையில் பல்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். குர்சூரத் படத்தில் என்ஜின் கி சீதி பாடலில் கூட அவர் தனது மாறுபட்ட நடிப்பு திறமை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது பற்றி அவர் கூறுகையில், நான் உண்மையில் அப்படி கிடையாது. அது எனது கதாபாத்திரம். எனத நிஜ வாழ்க்கையில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பாடலில் அவ்வாறு நடித்தேன். ஒவ்வொரு சமயமும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். மிலி போன்ற கதாபாத்திரத்தில் இதற்கு முன் நான் நடித்ததில்லை. இனி மேல் இது போன்ற கதாபாத்திரத்தில் மறுபடியும் நடிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.
ராஞ்ஹனா படத்தில் நான் நடித்த ஜோயா கதாபாத்திரம் போன்று நடிக்க நினைக்கிறேன். இருப்பினும் அதே போன்ற கேரக்டரில் மீண்டும் படிக்க வேண்டாம் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் சோனம் கபூரை இனி மாறுபட்ட கதாபாத்திரங்களில் காணலாம் என கூறப்படுகிறது.